Saturday 26 November 2011

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி




சீனாவில் அப்பெரியவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் வாழ்நாள் முழுதும் அந்த பெரிய மலையின் மறுபுறமாக செல்ல பல நாட்கள் நடக்க வேண்டியதாகிவிட்டது.

மலையில் நடுவில் ஒரு குகையை அமைத்தால் ஒரு சில நிமிடங்களில் மறுபுறத்திற்கு எல்லாமே – இதுதான் யோசனை.

மலையை குடைய ஆரம்பித்தார்.

அதைப்பார்த்த மற்றவர்கள் ஏளனம் செய்தனர்.

“ஏன் பெரியவரே! உன்னால் நடக்கக்கூட முடியவில்லை. இந்த நிலையில் பெரிய மலையைக் குடைவது சாத்தியமா? அதுவும் மலையின் மறுபுறம் வரையில் குடைந்து சாலையை போட முடியுமா? என்று வினவினார்.

பெரியவர் சொன்னார் “இந்த மலையை நான் உடைத்த வழி செய்ய முடியும். ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் இறந்து விட்டதும் என்னுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என தொடர்ந்து இதைச் செய்வார்கள். ஒரு நாள் மலையைக் குடைந்து முடித்து சாலை உருவாகியே தீரும். ஆனால் இந்த மலை வளராது” – என்று உறுதியாக சொன்னார்.

இச்செய்தி மன்னருக்கு எட்டியது.

பல்லாயிரக்கணக்கான ஆட்களை அனுப்பினார்.

மலையைக் குடைந்தனர்.

சாலைப் பிறந்தது.

பெரியவரின் யோசனை செயல்பட்டுவிட்டது.

மலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் செல்வது எளிதாகி விட்டது.

மலையையே நகர்த்தி விட்டார், பெரியவர்.

மேலும் சில நடைமுறைகளைப் பார்ப்போம்.

பிரெஞ்சு நாட்டை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய செய்த பெண்மணிக்கு, அந்த யோசனை தொடங்கிய வயது 19.

கண் தெரியாத, காது கேளாத, ஊமையான ஹெலன் ஹில்லர் பல நூல்களை எழுதி, குருடர்கள் படிப்பதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கி நோபல் பரிசை பெற்றார்.

நான்கு வயதில் கண் பார்வையை இழந்த மேத்தா பல நூல்களை எழுதி சாதனைப் படைத்தார்.

கால்களை இழந்த டக்லாஸ் பாடன், இரண்டாம் உலகப்போரில் சாதனைப் படைத்த விமானியானார்.

இன்று உலகம் வளர்ந்துளது என்றால் அதற்குக் காரணம் இயலாத நிலையலிருந்து பலர் சாதனைப் படைத்ததுதான்.

முடியும் என்று நம்பினால் அதற்கான வழிமுறைகள் பிறக்கும். முடியாது என நினைத்தால் அதற்கான காணங்கள் கிடைக்கும்.

நம்பிக்கை உறுதியாக இருந்தால் மலையையும் நகர்த்த முடியும்.


அறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம்




அறிவுச்சுடர் ஒளிரட்டடும்
அறியாமை விலகட்டும்
தொடர் முயற்சி தொடரட்டும்
வாழ்வெல்லாம் வெற்றி மலரட்டும்

வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது. அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆக்கப்பூர்வமாக சிந்ததிப்பதன் விளைவுதான் முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும். ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.

சுய இயக்கம் தேவை

வாய்ப்பு வரும்போது கற்றுக்கொள்ளலாம் என்ற சராசரி மனநிலையிலிருந்து சற்று மாறி, மனதை சுயமாக இயக்கி புதியனவற்றைக் கற்று அறிவு வளத்தைப் பெருகிக்கொள்ளும் சுயமுன்னேற்ற மனிதராக நீங்கள் மாற வேண்டும். ஏனென்றால் வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம். முயற்சியே வளர்ச்சிக்கான வழியாகும். தொடர்ந்து முயல்பவர்கள் மென்மேலும் வளர்ந்து வளம் பெறுகின்றார்கள். சூழ்நிலையைக் குறை கூறிக்கொண்டு, முடங்கிக் கிடப்பவர்கள் விரக்தியின் மடியில் சோகக் கனவுகளாகின்றார்கள். தொடர்ந்து முயல்பவர்களே வெற்றி வானில் மகிழ்ச்சிச் சிறகுகளை விரிக்கின்றார்கள்.

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள். மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல. ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும். நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச் சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

ஒவ்வொரு நாளும் வளருங்கள்

வெற்றியை நோக்கி தினமும் ஒரு சிறு அடியையாவது எடுத்து வையுங்கள். அத்துடன் உங்களுடைய அறிவு வளர்ச்சிக்காக சிறு முயற்சியையாவது மேற்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் செய்யும் பணி சம்மந்தமாக ஏதாவது ஒரு புதிய கருத்தை அல்லது நுட்பத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் சுய முன்னேற்றம் சம்பந்தமான கட்டுரைகள் அல்லது நூலின் ஒரு பக்கத்தையாவது படியுங்கள். உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றது. அதன் காரணமாக நீங்கள் செய்யும் பணியின் தன்மையும், வேலைமுறைகளும் மாறக்கூடும். ஆகவே, அவற்றிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் புதிய திறமைகளையும், நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால்தான் உங்களுடைய பணியை சிறபாகவும், வாடிகைக்யாளர்களுக்கு திருப்தியளிக்கும் விதத்திலும் செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி! நிறுவனத்தின் வளர்ச்சியே அதில் பணிபுரிவோரின் மகிழ்ச்சி. ஆகவே செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்தால் நமது வாழ்வு சிறக்கும் என்பதைப் புரிந்து கொண்டு பணியாற்றுங்கள்.

தொடர்ந்து கற்றலே தொடர் வளர்ச்சி

நீங்கள் வெற்றி பெற்றால் அதற்காக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித்திளைப்பதும், தோற்றுப் போனால் மூலையில் முடங்கி விடுவதும் நல்ல பண்பல்ல. ஏனென்றால் வெற்றியும், தோல்வியும் வாழ்வின் அங்கம். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். மனநிலை பக்குவப்படுதற்கு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய ஒவ்வொரு வெற்றியையும், தோல்வியையும் பாடமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்.

தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். வெற்றியிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது? என நீங்கள் கேட்பதை என்னால் உணர முடிகின்றது. இங்கு இரண்டு முக்கிய விசயங்களைக் கவனிக்க வேண்டும்.

அதாவது உங்களுடைய தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது ஒன்று, மற்றவர்கள் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது இன்னொன்று. நீங்கள் வெல்லும்போது மற்றவர்கள் தோற்றுப் போய் இருக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலைகளில் வெற்றிக்களிப்பில் மூழ்கி விடுவதைவிட, மற்றவர்கள் ஏன் தோற்றார்கள் என்று எண்ணிப்பார்த்து அதிலிருந்தும் கற்றுக்கொண்டு தொடர்ந்து உயர வேண்டும். இதுதான் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளும் இரகசியமாகும்.

புதிய பண்பாடு

தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு சில பண்பு நலன்களைப் பெற்று இருக்க வேண்டும். உங்களுடைய திறமைக்குத் தகுந்த சம்பளமும், பண்புக்குத் தகுந்த மரியாதையும், கிடைக்கும். நீங்கள் வகிக்கும் பதவி பெரியதாக இருந்தாலும், சிறியதாக, உங்களுடைய நற்பண்புகளை பொறுத்தே மற்றவர்கள் உங்களை மதிக்கின்றார்கள். ஆகவே, நற்பண்புகளின் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் நீங்கள் இருந்தால் எப்பொழுதும் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும், மற்றவர்களை நன்கு மதித்து, உரிய மரியாதை கொடுக்கும் பண்புடையவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்தும் பண்புகளை மென்மேலும் வளர்த்துக்கொண்டே இருங்கள். ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கென்று தனிப்பண்பும், சுய கௌரவமும் உள்ளது. அதை உணர்ந்து அவர்களை மதித்து பழகுங்கள். உங்களுக்கு வெற்றிப் பாதையை அமைத்துத் தருபவர்கள், உங்களுடன் பணிபுரிபவர்களே என்பதை உணர்ந்து மனித நேயத்துடன் பழகுங்கள். வெல்லுங்கள்!

சமமான மனநிலையை வளருங்கள்

அறிவின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதுடன் ஆரோக்கியமான மனநிலையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனம்போல்தான் வாழ்வு அமையும் என்பார்கள். மனம் செம்மையானால் எண்ணங்கள் தெளிவாகும். எண்ணங்கள் தெளிவானால் செயல்கள் வலுவாகவும், நேர்மையாகவும் இருக்கும். நேர்மையான செயல்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆம்! வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியான வாழ்வதுதான்.

மற்றவர்களை, குறிப்பாக உங்களுடன் பணிபுரிவோரைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களையும் உங்களைப் போலவே சமமாக நினைக்கின்றீர்களா? அல்லது தாழ்வாகவோ, உயர்வாகவோ நினைக்கின்றீர்களா? என சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களையும் உங்களைப் போலவே சமமாக அதாவது மனிதத் தன்மைமிக்கவர்களாக நினைப்பீர்கள் என்றால் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்கின்றீர்கள் என்று பொருள். அவ்வாறில்லாமல், உங்களைவிட உயர்வாக அதாவது மற்றவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் நீங்கள்தான் தாழ்ந்தவர்கள் என்று எண்ணினால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. மாறாக, மற்றவர்களை எல்லாம் தாழ்வாகவும் உங்களை உயர்வாகவும் நினைத்தால் உயர்வு மனப்பான்மை (Supperiority Complex) உண்டாகிறது.

ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், உயர்வு மனப்பான்மை இருந்தாலும் அது அவருடைய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கின்றது. எப்படியென்றால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் மற்றவர்களிடமிருந்து தன்னிச்சையாக நீங்களே விலகிக்கொள்வதுடன், அச்ச உணர்வையும், தோல்வி மனப்பான்மையையும் நெஞ்சில் சுமக்கின்றீர்கள். அதே நேரத்தில் உயர்வு மனப்பான்மை இருக்குமென்றால், மற்றவர்களையெல்லாம் தாழ்வாக நினைத்து அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றீர்கள். ஆகவே இந்த இரு மனநிலைகளும் உங்களுடைய வெற்றிக்கும், மகிழ்ச்சியான தொழில் வாழ்க்கைக்கும் தடைகளாகும் மற்றவர்களையும் சமமாக மதித்து உள்ளன்போடு பழகும் மனப்பாங்கே சிறந்ததாகும்.

செயல்திறன் உயரட்டும்

உங்களுடைய செயல்திறனைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் சென்ற ஆண்டு செய்த தைவிட இந்த ஆண்டு சிறப்பாகச் செய்வேன். இந்த ஆண்டு செய்ததைவிட அடுத்த ஆண்டு மிகச்சிறப்பாகச் செயல்படுவேன் என்ற சுய உறுதிப்பாடு (Self commitment) உங்களுக்கு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய பணிகளை மென்மேலும் சிறப்பாகச் செய்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க முடியும். அத்துடன், செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான திறமைகளையும், அறிவையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும். ஆகவே எந்த வேலையையும் சிப்பாகவும், இன்னும் சிறப்பாகவும் மிகமிகச் சிறப்பாகவும் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடும், அவ்வாறு சிறப்பாகச் செய்ய என்னால் முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கு தொடர்ந்து அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தெளிவும் உங்களுக்கு ஏற்படும்.

இவ்வாறு, உங்களுடைய உள்ளத்தில் உண்டாகும் புத்துணர்வு உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் மிளிர்ந்து தொடர் வெற்றியை உங்களுக்குத் தேடித்தரும். உங்களுடைய வாழ்வெல்லாம் வெற்றிக்கு இதுவே அடிப்படை ஆதாரம்! முயலுங்கள்! செய்து மகிழுங்கள்.

உள்ளத்தில் தெளிவு உண்டாகட்டும்
ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் மிளரட்டும்
வளர்ந்த இந்தியாவைச் செதுக்கும்
வளமான சக்தி நமதாகட்டும்


வெற்றி நிச்சயம



பூக்கள் உதிர்ந்து விழும் என்பதற்காக
மரங்கள் வருத்தப்படுவதில்லை
தென்றல் நின்று போகும் என்பதற்காக
மலர்கள் வருத்தப்படுவதில்லை
நிலவு தேய்ந்து விடும் என்பதற்காக
வானம் வருத்தப்படுவதில்லை
பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி க்டு
துவண்டு போகிறாய்?

பெ. ஆதவன்,
11 “ஆ” பிரிவு.


தேசிய விருது பெற்ற மாணவி இளம் விஞ்ஞானி ம. சுகப்பிரியா



ஒரு நேர்முகம்

நேர்காணல் அ. மாலதி

கரூர் வாங்கல் சாலையிலுள்ள வள்ளலர் கோட்டத்தில் இயங்கிவரும் குருதேவர் மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சுகப்பிரியா, யமுனா, மகேஸ்வரி சௌமியா, ஜனனி ஆகிய ஐவர் குழு தயார் செய்த அறிவியல் ஆய்வு தேசிய விருது பெற்று நமது குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால் பாராட்டும் பெற்று வந்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நடைபெற்ற 12வது தேசிய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வினை சமர்பித்து விளக்கிக்கூறி விருது பெற்று வந்துள்ள இக்குழுத்தலைவி செல்வி; ம. சுகப்பிரியாவிடம் ஒரு நேர்முகம்.

நீங்கள் எதைப்பற்றி ஆய்வு செய்தீர்கள்?

2004ம் ஆண்டு அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாண்டிற்கு குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மையக்கருத்தாக “வளமான எதிர்காலத்திற்கு நீர் ஆதாரங்களை பேணிப் பாதுக்காப்போம்” என தேசிய குழந்தைகள் அறிவியல் கழகம் அறிவித்திருந்தது. எங்கள் பள்ளியிலிருந்து 12 உப தலைப்புகளில் 12 ஆய்வுகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு குழுவிற்கும் 5 பேர் வீதம் ஆய்வு செய்தோம். எங்கள் குழுவில் Recycling and used water அதாவது பயன்படுத்திய நீரை மறு சுழற்சி செய்தல் என்ற ஆய்வினை மேற்கொண்டோம்.

நீங்கள் நேரிடையாக தேசிய மாநாட்டிற்குச் சென்று ஆய்வினை முன் வைத்தீர்களா?

அவ்வாறு செய்ய முடியாது. முதலில் மாவட்ட அளவில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு ஆய்வுகள் தேர்ந்தெடுக்கபட்டன.

அடுத்து திருவண்ணாமலையில் மாநில அளவிலான மாநாடு டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எங்களது ஆய்வு மட்டும் கரூர் மாவடத்திலேயே ஒன்றாக தேசிய மாநாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுபோன்ற அறிவியல் ஆய்வுகள் நாங்கள் முதல் முறையாக செய்தோம். அதுவும் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கபட்டது என்றவுடன் எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியாகும்.

மாநில மாநாட்டில் உங்களது அனுபவம் என்ன?

திருவண்ணாமலைக்குச் செல்லும் போதுதான் நான் முதன் முதலில் தொடர் வண்டியில் பயணம் செய்தேன். அதுவே எனக்கு புதிய அனுபவம். ஏனெனில் எனது ஊர் செல்லிபாளையம் என்ற ஒரு சிற்றூர். எனது பெற்றோர்கள் ஒரு குறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் கரூர் மாவட்டத்தை விட்டு வெளியில் செல்வதும் இதுவே முதல் முறை.

மாநாட்டில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விதவிதமான செய்முறை மாதிரிகளை (பரிசோதனை அடிப்படையிலான ஆய்வுகளுக்கு) கொண்டு வந்திருந்தனர். நாங்களோ ஒரு பி.வி.சி., பைப், ஆற்று மணலிடை கற்கள், மணல், அடுப்புகரி போன்றவைகளைத்தான் கொண்டு வந்திருந்தோம். கூடவே சில வரைவட்டை விபரங்கள் (Charts) இவ்வளவுதான். எங்கள் முறை வந்ததும் குழுத்தலைவியான நான் ஆய்வினை விளக்கினேன். கொடுக்கபட்ட 8 நிமிடத்தில் விளக்கமும் செய்முறையும் செய்து காண்பித்துவிட வேண்டும் என்பது எங்களது திட்டம். அதன்படியே நான் விளக்கும்போது எனது குழுவினர் செய்முறையினை செய்து காண்பித்தனர்.

மறுநாள் முடிவு அறிவிக்கும் தருணம் – கரூர் மாவட்டம் எனக்கூறி விட்டு ஒரு சிறிய இடைவெளி – எந்தப் பள்ளியின் பெயர் வருமோ என்ற பேரார்வம் – பின்பு குருதேவர் பள்ளி என்ற வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் நாங்கள் எழுந்து குதித்தே விட்டோம். எங்கள் மனம் வானம் வரை எட்டி குதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு குதூகலம். இது எனது வாழ்வில் கிடைத்த முதல் சாதனை என்றே கருதினேன்.

தேசிய மாநாட்டு அனுபவங்களை கூறுங்கள்.

தமிழ்நாடு அறிவியல் கழகம் எங்களை அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு சென்னையிலிருந்து தொடர்வண்டியில் அழைத்து சென்றது. தமிழ்நாட்டிலிருந்து 30 மாணவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து சென்றோம். குழுத்தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் பயணம் ஒரு புதிய அனுபவம். கௌஹாத்தி செல்லும் வழியில் இதுவரை வரைபடத்தில் மட்டுமே பார்த்து படித்த இந்திய பெரு நதிகளை கங்கை, பிரம்புத்திரா நதிகளின் மீது போடப்பட்டிருந்த பாலங்களின் மேல் பயணம் செய்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.

கௌஹாத்தி சந்திப்பிலிருந்தே எங்களுக்கு இராணுவ பாதுகாப்பளிக்கப்பட்டது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரிசித்திப் பெற்ற காட்டன் கல்லூரியில்தான் தேசிய மாநாடு நடைபெற்றது.

முதல்நாள் தொடக்க விழாவினை அஸ்ஸாம் முதலமைச்சர் திருமிகு. தருண் கோக்கை (Tarun Gogoi) துவக்கி வைத்தார். பின்பு அந்தந்த மாநில பாரம்பரிய உடையில் நகர்வலம் வந்தோம்.

பின்பு ஆய்வுகளை சமர்பிக்கும் அமர்வுகள் தொடங்கின. எனது ஆய்வு மறுநாள்தான் பட்டியலிடபட்டது என்பதால் முதல்நாள் முழுவதும் நான் வெவ்வேறு அமர்வுகளில் பார்வையாளராக இருந்தேன். மறுநாள் 28.12.04ந் தேதி எனது ஆய்வினை சமர்பித்தேன். முடிந்ததும் பார்வையாளர்கள் பாராட்டினார்கள்.

பாரத தேசமே ஓர் இடத்தில் கூடியிருப்பது போன்றதுதான். இந்த மாநாடு. வேறு மாநிலத்திலிருந்து வந்துள்ள எங்களது மாணவர் குலம். அவர்களோடு பழகும் வாய்ப்பு எல்லாவற்றையும் விட உணவு முறையும் வித்தியாசமானது. அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. பரிமாறுவதும் ஒவ்வொரு மாநில மாணவர்கள், புதிய ஊர், புதிய நண்பர்கள், புதிய உணவு, புதிய புதிய அனுபவங்கள் எல்லாமே புதிது. 30.12.04 மற்றொரு மறக்க முடியாத நாள்.

எங்களை ஒரு சுற்றுலாவாக கௌஹாத்தியில் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். பிரம்பாண்டமான அந்த பிரம்புத்திரா நதிக் கரையில்தான் கௌஹாத்தி நகரமே உள்ளது. பிரசித்திப்பெற்ற பிரம்புத்திராவில் புடகு சவாரி செய்தோம். பின்பு குருவா என்றொரு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு வாழை மட்டையால் போடபட்டிருந்த ஒரு வித்தியாசமான பந்தலில் கூடினோம். அங்கு நான் முதிய விஞ்ஞானி யஸ்பால் (Yashpal) அவர்களை சந்தித்து அறிவியல் ஐயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

மாலையில் ஸ்ரீமந்தா சங்கரதேவா கலாசேத்ராவிற்குச் சென்றோம். அங்கு நடைபெற்ற கலைவிழாவில் அஸ்ஸாம் முதலமைச்சர் எங்களை சந்தித்து உரையாடினார்.

இச்சுற்றுலாவின் போது ஓர் ஓவியப் போட்டி வைத்தார்கள். அதற்கும் “தண்ணீர்” தான் தலைப்பு. நான் ஒரு வீடு வரைந்து சமைலறைக் கழிவு நீர், குளித்த தண்ணீர், துணி துவைத்தநீர் இவற்றை ஒரு தொட்டியில் சேகரித்து எங்களது ஆய்வின்படி மறுசுழற்சி செய்த நீரில் எனது அம்மா துணி துவைப்பது போல் வரைந்தேன். எனக்கு முதல் பரிசு கிடைத்து. பின்பு ‘ஹந்தர்மன்தர்’ என்ற அறிவியல் இதழை விற்பதற்கு போட்டி வத்தார்கள். அதிலும் அவர்கள் கொடுத்த குறுகியகாலத்தில் ரூ. 600க்கு விற்று முதலிடம் பெற்றேன். இதற்கு Best Communicator என்ற பாராட்டினை வழங்கினார்கள். அடுத்த ஆண்டு ஐதாராபாத்தில் நடைபெற உள்ள தேசிய மாநாட்டில் தொண்டாற்ற என்னை அழைத்துள்ளார்கள்.

31.12.04 இறுதிநாள். பிரிவு உபச்சார விழாவில் பரிசளிப்பு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 558 ஆய்வுகளுக்கு விருது வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் ஆய்வில் ஈடுபட்ட மொத்த மாணவர்கள் – 5 லட்சம் பேர்

செய்த ஆய்வுகள் ஒரு லட்சம்
தேசிய விருது பெற்றவ 558

நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த நமது குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மதியம் 2.00 மணிக்கு மேடைக்கு வந்தார்கள். எங்களோடு 1.30 மணி நேரம் பேசினார்கள். எங்களது விருதுகளைப் பாராட்டினார். அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்பதால் 20குழந்தைகளை முன்னால் வந்து அமரச் சொன்னார்கள். தமிழ்நாட்டின் சார்பாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரை அருகில் பார்க்கவும் அவரோடு உரையாடவும் கைகுலுக்கவும் கிடைத்த வாய்ப்பை என்னால் என்றென்றும் மறக்க முடியாது.

இத்தனை சிறப்புகள் கிடைத்தது பற்றி….

எனது பெற்றோர்கள் மலையப்பன், குப்பாத்தாள். இருவரும் கிராமத்தில் உள்ள குறுவிவசாயிகள். படிப்பறிவற்றவர்கள். இந்த ஆய்வின் சிறப்பைப் பற்றி அறியாதவர்கள் என்ற நிலையில் என்னை ஊக்கப்படுத்தியவர்கள் எனது வழிகாட்டி ஆசிரியை செல்வி. கோகிலா அவர்களும் பள்ளி நிர்வாகமும்தான்.

இளம் விஞ்ஞானி என்ற பட்டத்தோடு எங்களது ஆய்விற்கு “Excellent Work donek என்ற சிறப்புத் தகுதியும் கிடைத்துள்ளது. எங்களது பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு நமது குடிரசுத்தலைவரின் தோழரும் ஸ்ரீ ஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் முதன்மை விஞ்ஞானியுமான திரு. நெல்லை சு. முத்து அவர்களும், சிந்தனையாளர் திரு.எம்.எஸ். உதமூர்த்தி அவர்களும் வந்திருந்து பாராட்டி சிறப்பித்தனர்.

இவ்வறியல் ஆய்வில் பாரத நாட்டளவில் 5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் ஒரு லட்சம் ஆய்வுகளில் 558 ஆய்வுகள் தேசிய விருது பெற்றன. இதில் Excellent Work done என்ற சிறப்புப்பட்டத்தோடு எங்களது ஆய்வு தேர்வு செய்யப்பட்டுள்ளுது என்பதை மகிழ்வுடனும் பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களது உழைப்பிற்கும் சிறுமிகளான எங்களின் தன்னம்பிக்கைக்கும் இறையின் திருவருள் துணை நிற்க பெற்ற பரிசாக இதைக் கருதி எங்களது குருதேவர் பள்ளிக்கு மேலும் பல சிறப்புகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.


தன்னம்பிக்கையும் தளராமுயற்சியும்



போலந்து நாட்டில் பிறந்த மார்ஜா என்ற பெண்மணி இரண்டுமுறை நோபல் பரிசு பெற்றவர் என்றால், யார் அந்த மார்ஜா என்று கேட்கத் தோன்றும். அதுவே நோபல் பரிசு பெற்ற பெண் யார் என்றோ… அல்லது ரேடியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது..? என்றோ கேட்டால், மேரி க்யூரி என்று பலரும் கூறுவர். ஆம்.. மார்ஜா என்று பெற்றோரால் பெயரிடப்பட்டவர்தான் வரலாற்றில் மேரி க்யூரியாகப் புகழப்படுவர்.

இவரையும் சேர்த்து இவரது பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். போலந்தை, இரசியா வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த பொழுது, கல்வியை இரசிய மொழியில்தான் கற்றுத்தர வேண்டுமென்று ஆணையிட்டது இரசிய நாடு. நாட்டுப்பற்றும் தாய்மொழிப் பற்று மிக்குடைய மார்ஜாவின் தந்தை ஆணைக்கு அடிபணிய மறுத்தா. விளைவு… ஆசிரியர் பணியை அவர் இழக்க நேர்ந்தது. வருவாய் இழப்பு அவர் குடும்பத்தை வறுமையில் தள்ளி வாட்டியது.

நோய்வாய்ப்பட்டு மூத்த சகோதி மரணம்.. பாசமிகு தாயை மார்ஜாவின் பதினோறாவது வயதில் பறிகொடுத்த துயரம். இன்னல் பலவற்றக்கிடையேயும் மார்ஜாவும் அவரது அக்கா ப்ரன்யாவும, அண்ணன் ஜோஜியாவும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்துத் தேறினர், முதலிடம் பிடித்து.

பாரீசு நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக வேண்டுமென்று ஆசைப்பட்டனர் அக்காவும் தங்கையும். பாரிசுக்கு அனுப்பி ஒருத்தியை படிக்க ஐக்ககூட வசதியில்லை தந்தைக்கு.

அக்காவை மருத்துவக்கல்லூரியில் சேர்த்து, மார்ஜா வேலைக்காரியாக வேலை செய்து, சம்பாதித்து அக்காவின் படிப்புக்கு உதவினார். பின்னர் பௌதிகப்பிரிவில் முதலாவதாகவும், தொடர்ந்து கற்று கணிதத்திலும் பட்டங்கள் பெற்றார்.

ஆராய்ச்சியில் ஆர்வமுடைய ஆசிரியராக விளங்கிய பியரி க்யூரியை மார்ஜாவாக இருந்து மேரியாக பெயர்மாற்றம் பெற்றிருந்த மேரி மணம்புரிந்து மேரி க்யூரி ஆனார்.

‘பசி நோக்கார்; கண் துஞ்சார்; கரும்மே கண்ணாயினார் என்பதற்கேற்ப, இரவென்றும் பகலென்றும் பாராமல் நான்காண்டுகள் இருவரும் சேர்ந்து செய்த ஆராய்ச்சியன் பயனாக புதிதாக இரண்டு மூலகங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றுக்கு போலியம் என்றும் ரேடியம் என்றும் பெயர் வைத்தனர். இந்த அரிய கண்டுபிடிப்பிற்காக மேரிக்கும் அவரது கணவர் பியரி க்யூரிக்குமாக 1903ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கபட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு கணவர் ஒரு விபத்தில மரணமடைந்தார்.

ஆராய்ச்சிக்கு துணைபுரிந்த அருமைக் கணவரின் இழப்பு வேதனையைத் தந்தது என்றாலும் மேரி மனம் தளராமல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தான் கண்டுபிடித்த ரேடியம் என்ற மூலகப் பொருளின் அடாமிக் எடையைக் கண்டுபிடித்தார். 1911 ஆம் ஆண்டில் இராசயணப் பிரிவிலும் நோபல் பரிசைப் பெற்றார்.

ரேடியத்திலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்களாலேயே தாக்கப்பட்டு 1934ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். மேரி கியூரியின் தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் கொண்ட வாழ்க்கை, வரலாறு படைக்க விரும்புவோர்க்கு வழிகாட்டியாக அமையும்.


முயற்சி


இளைஞனே
நம் முயற்சிகள்
தோற்கலாம்!
நாம் முயற்சிப்பதில்
தோற்கக்கூடாது!
முயற்சி செய் – அது
பயிற்சியாக மாறும்
பயிற்சி செய் – அது
வெற்றியாக மாறும்.
- என். செல்வராஜ்
கோவை


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் அருகில் இருக்கும் கூச்சக்கல் புதூர் என்னும் சிற்றூரில் காளியண்ணன் – சரசுவதி பெற்றிட்ட நான்காவது பிள்ளைதான் கனகராஜ்.

இது ஒரு வறிய விவசாய குடும்பம். தன் தந்தையின் முதல் மனைவிக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில், இரண்டாம் மனைவியின் கடைசி பிள்ளையே கனகராஜ்.

தாயின் அன்பை இழந்து பெரிய அன்னையால் வளர்க்கப்பட்டு இளம் வயதிலேயே அனாதை போன்ற நிலைக்கு ஆட்பட்டு, பணி,பஞ்சம், பட்டினி என்ற நிலையில், அன்பு பாசத்திற்காக ஏங்கி தவித்த நாட்களே இவன் கடந்த நாட்கள்.

இப்படி பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு 1993ல் பள்ளி இறுதி வகுப்பு +2 தேர்ச்சிப் பெற்றான்.

மேற்கொண்டு படிக்க வாய்ப்பு வசதி இல்லை. ஆனால் படிக்க வேண்டும். அதுவும் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும் என்ற மிக உயரிய இலட்சியம் மனதில் பதிந்து விட்டது, அது மெல்ல மெல்ல வளர்ந்து வெறியாக மாறியது, எப்படியும் எம்.பி.பி.எஸ் படித்தே தீருவது என்ற குறிக்கோள் கல்வெட்டாய் பதிந்து விட்டது நெஞ்சத்தில்.

குறிக்கோளும் இலட்சியமும் இருந்துவிட்டால் போதாது - பொருளாதாரம் வேண்டுமே! எங்கு செல்வது என ஏங்கி நாட்களை வீணே கழிக்கவில்லை.

1993 முதல் 1995 வரை

ஒரு லாரியில் கிளீனராக பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில் கடுமையான உழைப்பிற்குப்பின் ஒட்டுநர் உரிமம் பெற்று லாரி ஓட்டுநர் (டிரைவர்) ஆனார். தீயபழக்கங்கள் ஏதுமின்றி இரவு பகலாக உழைத்து பொருள் சேர்த்தார் அவர் எண்ணமெல்லாம் படிப்பு, படிப்பு! எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டும்.

6 ஆண்டுகள் உழைத்து பாடுபட்டு மார்ச் 1999 ஆம் ஆண்டு +2 இம்ப்ரூமெண்ட் தேர்வு எழுதுகிறார்.

ஆறாண்டு இடைவெளிக்குப் பிறகு அதுவும் லாரி கிளீனர் டிரைவர் தொழில்களை செய்தவர் +2க்கு உரிய பாடப்புத்தகங்களை வாங்கிக் கொண்டு தனிப் பயிற்சி மையத்தில் (டியூசன் சென்ட்டரில்) சேர்ந்து இவரையும் பகலையும் அறியாது கண்துஞ்சாமல், நான்கு மாதங்கள் புத்தகங்களை அன்றி வேறொன்றையும் அறியாதவன் ஆனார். தேர்வில் பிசிக்ஸ் 197, கெமிஸ்ட்ரி 194, உயிரியல் 194 மொத்தத்தில் அறுநூறுக்கு 585 மதிப்பெண்களைப் பெற்று நுழைவுத்தேர்வு எழுதினார். கடுமையான உழைப்பால் கலங்கிய கசங்கிய உடல்நலம் ஒத்துழையா நிலையில் நுழைவுத் தேர்வு கைக்கொடுக்கவில்லை. 8 மதிப்பெண் குறைந்த நிலையில் மீண்டும் 2000த்தில் நுழைவுத் தேர்வு. அந்த ஆண்டும் 1.51 மதிப்பெண் இடைவெளி.

2001 விடாமுயற்சியாக கொண்ட குறிக்கோளை வென்றெடுத்தே தீருவது என்ற நிலையில் பொருள் சேர்க்க மீண்டும் ஆறுமாதங்கள் லாரி டிரைவராக பணியாற்றி பொருள் சேர்த்துக் கொண்டு 4 மாதங்கள் தேர்வுக்கு தயாரித்துக் கொண்டு 2001-ல் நுழைவுத்தேர்வு 291.77/300 மதிப்பெண்கள்.

முதல் பட்டியலில் மருத்துக் கல்வியில் இடம் கிடைக்காத நிலை. ஏமாற்றம், வாழ்க்கையே போய்விட்டதென அழுகை, இனியென்ன அனைத்தும் போய்விட்டதே என்ற நிலையில் 60 நாட்களுக்குப் பிறகு ஒளிப் பிறந்தது.

28.09.2001ல் கடிதம் வந்தது.

30.09.2001ல் 26ஆம் வயதில் தூத்துகுடி மருத்துவக்கல்லூரி மாணவர்!

இடையில் நிகழ்ந்தவை…

அடுத்த இதழில்……





Saturday 24 September 2011

Operating System Concepts

Hello, Welcome to this part ;

WELCOME TO SONAIPATTY


This part contains about an Operating System

Operating System Concepts.


Before we continue...


What is an operating system ?
This is an important part of operating system ;
Operating system is nothing but a program that manages the computer hardware. It also provides a basic for application program and acts as an intermediary between a user of a computer and the computer hardware;

A computer system contains four levels ;
1. Hardware
2. Operating System
3. Application programs
4. Users

1. HARDWARE :
This is a visible part of computer system.
a. CPU ( Central Processing Unit , that is , which means the processor, registers, etc are contained for performing arithmetic operations, for executing instructions that are produced by programmer,still more functions.)

b. Memory ( that is , which is used to store the data and instruction or programs that are used to be executed in the system);

c. Input / Output Devices ( that is , which are mostly getting the user request from keyboard or mouse [input devices] and displaying the executed data by CPU or print the data by printer);


2. APPLICATION PROGRAM :

This is not a visible part , but we can absorb , that is , text editor [we cannot see any text editor's shape as a hardware device, such as Hard disc which is round shape like a CD ] . but we can absorb which is used to writing programs by high level programs.

example :
Text editors, Assemblers, compilers, data base system ,MS word , any application programs.


----------------------------------------


A computer has a many resources[ that is , hardware and software , so we can view an operating system as a resource allocator ]; these resources may be required for problem solving [such as CPU time, memory space, file-storage space, I/O devices ]........... so operating system acts as the manager of these resources . .................................
then OS decide which user[ more than one user] or which resources [ I/O devices ,Main Memory(which is fast , but all data are deleted while the power off, we need to know , all data and programs are executed after bringing into this memory ) ]
need to be accessed at the time of execution ;


The OS is designed to maximize resource utilization;


This is a SONAIPATTY website which belongs to SONAIPATTY as well as people those who are living in Sonaipatty.

SONAIPATTY:

SONAIPATTY is a small village that is near to sivaganga [ about 15Km ] in TamilNadu in India.

கவனமுடன் இருப்போம் :




" வரப்போகிற அடிமைத்தனத்தை தவிர்ப்போம்":


" கற்றலின் நுணுக்கம் கல்வியை பெருக்கும் "
" கல்வியின் பெருக்கம் மேன்மையை கொடுக்கும் "

" மேன்மையில் வாய்மை உள்ளத்தை சீராக்கும் "
" உள்ளத்தில் சீர்மை புதுமையை படைக்கும் "

" புதுமை படைப்பு பிறர் சாரா நிலையை கொடுக்கும் "
" சாரா நிலை அடிமையிலா வாழ்வை கொடுக்கும் "

" அடிமையிலா வாழ்வுக்கு , கற்றலில் நுணுக்கம் !!! "

" நாம் அடிமையாக்கப்படப்போகிறோம் என்பதற்கு
முதல் அறிகுறி அயல்நாட்டு மோகமே இன்றி வேறொன்றுமில்லை "
- சோனைபட்டி

This is google map for sonaipatty.

SONAIPATTY resides within AZHAKCHIPATTY [ toward East ] ,KULIPATTY [ toward North ], MALAIPATTY [ toward West ], DEVANKOTAI [ toward South ];

This is another website for sonaipatty:

This part contains more photos about sonaipatty village people;

Operating System



SONAIPATTY


Wednesday 14 September 2011

கவனமுடன் இருப்போம் :

கவனமுடன் இருப்போம் :




" வரப்போகிற அடிமைத்தனத்தை தவிர்ப்போம்":


" கற்றலின் நுணுக்கம் கல்வியை பெருக்கும் "
" கல்வியின் பெருக்கம் மேன்மையை கொடுக்கும் "

" மேன்மையில் வாய்மை உள்ளத்தை சீராக்கும் "
" உள்ளத்தில் சீர்மை புதுமையை படைக்கும் "

" புதுமை படைப்பு பிறர் சாரா நிலையை கொடுக்கும் "
" சாரா நிலை அடிமையிலா வாழ்வை கொடுக்கும் "

" அடிமையிலா வாழ்வுக்கு , கற்றலில் நுணுக்கம் !!! "

" நாம் அடிமையாக்கப்படப்போகிறோம் என்பதற்கு
முதல் அறிகுறி அயல்நாட்டு மோகமே இன்றி வேறொன்றுமில்லை "
- சோனைபட்டி

Tuesday 13 September 2011

பயனளித்த புத்தகம்

ஒரு நிருபர் பெர்னாட்ஷாவை பார்த்துக்கேட்டார் எந்தப் புத்தகத்திலிருந்து உங்களுக்கு அதிகமான மகி்ழ்ச்சி கிடைத்தது என்று சொல்ல முடியுமா ?
பெர்னாட்ஷா பளிச்சென்று பதில் சொன்னார் :
என்னுடைய “செக்”(காசோலை) புத்தகத்தில் இருந்து….

—————————————————————————————————————————————————-
நாய்களுக்குத் தெரியாது

தலைமை நீதிபதியை அவருடைய வீட்டில் பார்க்க ஒரு வக்கீல் சென்றிருந்தார்.
அவரைப்பார்த்து விட்டு வெளியே வரும்போது… நீதிபதியின் வீட்டு நாய் பலமாகக்
குரைத்துக்கொண்டே வக்கீலின் பின்னால் ஓடிவந்தது…வக்கீல் பயந்து போய் வேகமாக ஓடத்தொடங்கினார்.

அதைப் பார்த்த நீதிபதி உரத்த குரலில் கேட்டார் :
“ஏனய்யா ஓடுகிறீர் ? குரைக்கிற நாய் கடிக்காது ” என்கிற பழமொழி உமக்குத் தெரியாதா?’

வக்கீல் திரும்பிப் பார்த்துச்சொன்னார் :
” பழமொழி உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்…..நாய்க்குத்தெரிய வேண்டுமே..? “

——————————————————————————————————————————————————

இப்படித்தான் செய்தேன்..

ஜெஹாங்கீருடைய காதலி நூர்ஜஹான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்
ஜெஹாங்கீர் அவளிடம் இரண்டு புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி
சொல்லிவிட்டுப்போனார். திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா மட்டுமே இருப்பதை
பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.

“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக் கடுமையாக..

“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.

“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.

“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும் கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது

——————————————————————————————————————————————————
வினோத வழக்கு

விவாகரத்து வழக்கு அது.
விவாகரத்து கோரிய அந்தப் பெண்…. நீதிபதியை பார்த்து தன்னுடைய கணவரிடமிருந்து ஜுவனாம்சத்தொகை எதையும் தான் எதிர்பார்க்கவில்லை என ஆணித்தரமாக சொன்னாள்.

” நான் விரும்புவதெல்லாம்… நான் அவரைத் திருமணம் செய்து கொண்டபோது என்ன நிலையில் இருந்தேனோ அந்த நிலையிலேயே அவர் என்னை விட்டு விட்டுப் போனால் போதும்.”

நீதிபதி கேட்டார்…. “நீ என்ன நிலையிலிருந்தாய் ? “

“அவர் திருமணம் செய்து கொண்டபோது நான் விதவையாக இருந்தேன்.” என பளிச்சென்று பதில் சொன்னாள் அவள்.

——————————————————————————————————————————————————–

யார் அங்கே?….
அமெரிக்கன், ஆங்கிலேயன், இந்திய நாட்டு சர்தாஜி ஆகிய மூவரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தக் கார் பழுதாகி நின்று விட்டது.
சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி “இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள்.
“இங்கே வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். உங்களைத் தங்க அனுமதிக்க முடியாது. வீட்டிற்கு வெளியே மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச் செல்லுங்கள். யாராவது இங்கே வர முயற்சி செய்தால் இந்தத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான் வீட்டுக்காரன்.
மூவரும் மாட்டுக் கொட்டகையில் படுத்தார்கள்.
அமெரிக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்த அவன் மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
காலடி ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று குரல் கொடுத்தான்.
தப்பிக்க நினைத்த அமெரிக்கன் “மியாவ்” என்று பூனையைப் போலக் கத்தினான்.
வந்தது பூனை என்று நினைத்த வீட்டுக்காரன் சும்மா இருந்தான்.
உயிர் பிழைத்த அமெரிக்கன் மாட்டுக் கொட்டகைக்குத் திரும்பினான். நடந்ததை நண்பர்களிடம் சொன்னான்.
அடுத்தது ஆங்கிலேயன், மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று கேட்டான்.
“மியாவ்” என்று குரல் கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான் ஆங்கிலேயன்.
நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் சர்தாஜி அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று கோபத்துடன் குரல் கொடுத்தான்.
“நான் தான் பூனை” என்று பதில் சொன்னான் சர்தாஜி…

——————————————————————————————————————————————————–

ஐயோ! சிங்கம்!…

சர்க்கஸ்(circus-வித்தை) முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.
அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது….

——————————————————————————————————————————————————–

உண்டியலில் பணம்….

தன் மகனை அழைத்த தந்தை, “நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, “நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு” என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?” என்று கேட்டார்.

“இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது” என்றான் அவன்.

“அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?” என்று கேட்டார் அவர்.

“அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்” என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

——————————————————————————————————————————————————–

சொர்க்கத்தில் காந்தி…

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

“யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் ‘நான் தான் இந்தியாவின் தந்தை’ என்று சொல்லியிருக்கிறான்”

—————————————————————————————————————————————————

பாதிப் பேர் கழுதைகள்?..

ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன்(Sheridan), பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது,
“இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.
“நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.
கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, “மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல” என்றார்.

—————————————————————————————————————————————————–

சிறுவன் போட்ட போடு ..

தன் நண்பனுடன் பேருந்திற்குள் ஏறிய 12 வயதுச் சிறுவன், ஓட்டுனரின் பின்பக்கம் உள்ள
இருகையில் அமர்ந்தான். பேருந்து இன்னும் புறப்படவில்லை.

வந்த சிறுவனோ வழவழவென்று தன் நண்பனிடம் கத்திப்பேசிக்கொண்டிருந்தான்.

“எங்க அப்பா காளைமாடாகவும், எங்க அம்மா பசுமாடாகவும் இருந்தால் நான்
கன்னுக்குட்டி. எங்கப்பா ஆண்யானையாகவும், எங்க அம்மா பெண் யானையாகவும்
இருந்தால் நான் குட்டி யானை”

இந்த ரீதியில் அவன் பேசிக்கொண்டிருந்தான்.

எரிச்சலைடைந்த ஓட்டுனர் சும்மா இருந்திருக்கலாம், அவருடைய கெட்ட நேரம்,
பையனிடம் அவர் வாயைக் கொடுத்தார்.

“டேய் கொஞ்சம் நிறுத்துடா தம்பி. இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு.
உங்கப்பா குடிகாரனாகவும், உங்க அம்மா ஊதாரியாகவும் இருந்தா, நீ இப்ப என்னவா இருப்பே?”

பையன் தயங்காமல் சட்டென்று பதில் சொன்னான்.

“நான் பஸ் டிரைவரா இருப்பேன்”

———————————————————————————————————————————————————

டாஷ்மாக்கில் வினோத் .

டாஷ்மாக் கடை நண்பர் வினோத்திடம் “ என்ன.சிவா இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ? என்று கேட்டார்..
அதற்கு வினோத் சொன்னார் “ இது என்னுடைய அன்றாட பிரச்சனையான மனைவிதான் என்றார்.

நண்பர் கேலியாக .. “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

வினோத் சொன்னார் ” நான் ஒரு ஆண்மகன்தான் ” அதில் என்ன சந்தேகம்..

நண்பர் உடனே சொன்னார் … “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

வினோத் சொன்னார் ” நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம். எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? ” என்றார்….

——————————————————————————————————————————————————–

முல்லாவும் மருத்துவரும்....

முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்றார்…

தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்ததை எடுத்து கூறினார்..

மன நலமருத்துவரோ.. ” கவலைப்படதே… முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ” என்று கேட்டார்

முல்லா சொன்னார் “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

மன நலமருத்துவர் உடனே “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா சட்டென்று “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “

———————————————————————————————————————————————— ஆராய்ச்சி…

முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது….

வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் ” ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான் , நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் ” என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்

——————————————————————————————————————————————————

முல்லாவும் அவரது மனைவியும்..

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நெடுஞ்சாலையில் சண்டையிட்டு கொண்டே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சில பன்றிகள் சென்றன அதை ப் பார்த்த முல்லா தனது மனைவியை கடுப்பாக்க… ” உன்னுடைய சொந்தங்கள் செல்கின்றன பார் ” என்று மனைவியை பார்த்து சொன்னார்.

அதற்கு அவர் மனைவி சட்டென்று ….. ” ஆம் , எனது மாமனாரும் மாமியாரும் செல்கின்றார்கள்” என்றாள்

——————————————————————————————————————————————————

மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள்…. !

அதிகாலை , மனநல மருத்துவ தலைமை அலுவலகத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு

“ஐயா தங்களுடய மருத்துவமனையிலிருந்து ஏதாவது மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? ” எனக் கேட்டார் ஒருவர்.

“இல்லை” என்றார் மருத்துவமனை ஊழியர்

அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ? என மீண்டும் கேட்டார்.

” இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வரவில்லை ” என்று பதில் சொன்னார் ஊழியர்.

“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ என விடாமல் கேட்டார் தொலைபேசி அழைப்பாளர்

“ யார் சார் நீங்கள்… காலையில் இப்படி போன் செய்து உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம் பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக் கேட்டார் ஊழியர்.

“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.

——————————————————————————————————————————————————

கம்யூனிஸ்ட் கட்சி தான் எனது தாய்…

குருச்சேவ் ரஷ்யாவில் பொருப்பில் இருந்தபோது ஒரு பள்ளி மாணவனை பார்த்து…

உன் தந்தை யார் ? எனக் கேட்டார்

“ நிச்சயமாக குருச்சேவ்தான் எனது தந்தை “ என்றான் மாணவன்..

“நல்லது ” அப்படியானால் உனது தாய் ? “
“கம்யூனிஸ்ட் கட்சி தான் எனது தாய்” என்றான் மாணவன்..

குருச்சேவுக்கு மிகவும் மகிழ்ச்சி மீண்டும் அந்த குழந்தையை பார்த்து கேட்டார் “ மிகவும் மகிழ்ச்சி! இப்படித்தான் சொல்லவேண்டும் ,
இப்போது சொல் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் ? “

“அநாதையாக” என்றது குழந்தை…

—————————————————————————————————————————————————–

மிகச்சிறந்த நடிகன்….
ஒருவன் ஒரு சினிமா அரங்கில் உட்காந்திருந்தான், மனைவி தொடர்ச்சியாக அவனிடம் கதாநாயகன் தன் மனைவியை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறான் எண்பதனை சொல்லிக்கொண்டே இருந்தாள்.
நிறுத்து உன் உளறலை என்று தொடர்ந்த கணவன்…. அதற்காக அவனுக்கு எவ்வளவு தொகை தரப்படுகிறது என்பது உனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல நடிகன் என்பது மட்டும் நிச்சயம் என்றான்.

மனைவி சொன்னாள் , ” வாழ்க்கையிலும் அவர்கள் கணவன் மனைவிதான் என்பது ஒருவேளை உங்களுக்கு தெரியாது போல ” என்றாள் கிண்டலாக…

அவன் சொன்னான் , ” அடக்கடவுளே! அது உண்மை என்றால், நான் இதுவரை பார்த்த நடிகர்களிலேயே மிகச்சிறந்த நடிகன் இவன்தான். இல்லாவிட்டால்,தன் சொந்த மனைவியிடம் இந்தளவு அன்பைத் திரையிலும் காட்டுவது மனித சக்திக்கு மீறியது ஆகும். நடிப்பை பொறுத்தவரை அவன் ஒரு மாமேதைதான் ” என்றான்

——————————————————————————————————————————————————

அவை என்னுடையதல்ல..

புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார்.
அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள்.

புத்தரை, அவருடைய போதனைகளை வெறுப்பவர்கள்.எனவே
ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் அந்த வழியாக
செல்ல வேண்டாம் என்றார்.

ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார்.
அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து
கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித
சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரைக்
கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க
முடியவில்லை “குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக
பேசி விட்டனர்,நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம்
குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு
வந்திருக்கலாமே”என்றார்.

புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
“ஆனந்தா! இது யாருடையது?” என்றுகேட்டார்.

“இது உங்களுடையது”

“இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்”

என்றார்.சிறிது நேரம் சென்றதும் மீண்டும்”ஆனந்தா!இது யாருடையது ?”
என்று கேட்டார்.

“இது என்னுடையது சுவாமி!”

“எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாயே?”

“சுவாமி!இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக்
கொண்டதால் இது என்னுடையதாயிற்று”என்றார்.

“ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று ,
அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
எனவே அவை என்னுடையதல்ல”என்றார்.

——

நகைச்சுவை

——————————

காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே !
காதலி : ஆமாம் அன்பே…
காதலன் : அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..
காதலி : மாட்டேன்..என்னுடையது இறவா காதல் அன்பே…

—————————————————————————————————————————————————–

நோயாளி : என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..
டாக்டர் : கவலையே படாத… இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன் !.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்

—————————————————————————————————————————————————–

எமன் : அங்கே என்ன சத்தம்… சித்திரகுப்தா ..?

சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் “ராகிங்” (பகிடிவதை) செய்கிறார்கள் பிரபு..!!!

—————————————————————————————————————————————————–

சங்கீத வித்துவான் 1: எனக்கு மேடை ஏறி கச்சேரி செய்கிறதைவிட வானொலியில் கச்சேரி செய்கிறதுதான் ரொம்ப பிடிக்கும்

சங்கீத வித்துவான் 2: ஏன் அப்படி சொல்லுறிங்க..?

சங்கீத வித்துவான் 1: அப்பதானே மேலே கல்லு வந்து விழாது.

——————————————————————————————————————————————————

கட்சி ஆதரவாளர்: தலைவரே ! … எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்?
தலைவர் : அவர் நம்ம “கிளைச்செயலாளர் ” .

—————————————————————————————————————————————————–

பிச்சக்காரன் : ” பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…

——————————————————————————————————————————————————

ஆசிரியர் : “உங்க மகனின் கையெழுத்தை இன்று முழு நாளும் பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!”

தந்தை: அடடா ! அவ்வளவு அழகா எழுதுவானா!”

ஆசிரியர்: சுத்தம்… எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு!..அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் என்றேன் !

—————————————————————————————————————————————————–

சுந்தரி : நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்… நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி..

ராஜீ :அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு

—————————————————————————————————————————————————–

ஒருவன் : சின்ன முள் குத்திவிட்டது..என்னசெய்யலாம்
மற்றவன்: இன்னெரு முள்ளாகப்பார்த்து குத்திகொண்டு வாடா…. நேரம் பார்க்கலாம்

—————————————————————————————————————————————————–

சுரேஸ் : என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு..

ரமேஸ் : “இனிமேல் அடிக்கமாட்டேன்” என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !

—————————————————————————————————————————————————-

ராஜா : என் ஜாதகப்படி எனக்கு அறிவு கொஞ்சம் அதிகமாம்
மந்திரி : இப்போதாவது புரிகிறதா.. நான் ஏன் ஜாதகம் பார்ப்பதில்லை என்று..

——————————————————————————————————————————————————

சிலந்தி1: அந்த சிலந்தி பூச்சிக்கு ஏன் இவ்வளவு தற்பெருமை.
சிலந்தி2: “வெப் சைட்” ஆரம்பிச்சிருக்காம்..அதானாலதான்

——————————————————————————————————————————————————

மனைவி : அத்தான்… பல்லு வலி தாங்கமுடியல்ல..
கணவன் : ஏன் ?.. என்னத்தை அப்படி கடித்த நீ..
மனைவி : உங்க அம்மாவைத்தான்

—————————————————————————————————————————————————-

ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டது தப்பா போச்சுது
மற்றவன் : என்னாச்சுடா..?
ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கா..

—————————————————————————————————————————————————-

ராம் : கண்ணன் வீட்டுக்கு போயிடாதே.. அவன் சுத்த கஞ்சப்பையன்
கோகு : ஏன்டா மச்சான்
ராம் : அவன் வீட்டில இருக்கும் போது “டிரஸ்” கூட போடமாட்டான்

——————————————————————————————————————————————————-

நீதிபதி : “ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே……உனக்கு வெக்கமாயில்லே?”
குற்றவாளி : ” நீங்க தினமும் வர்றீங்களே…ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?”

———————————————————————————————————————————————————

ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…

ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?

ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..

———————————————————————————————————————————————————-

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்­ணீ ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.

———————————————————————————————————————————————————–

சங்கர் : படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…

மற்றவர்: யார்..வில்லனா? கதாநாயகனா?..

சங்கர் : அட போங்க… தயாரிப்பாளர்..

—————————————————————————————————————————

Monday 12 September 2011

வித்தைக்காரனை வென்ற கதை




தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.

இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.

சோர்வை போக்க எட்டு வழிகள்

சோர்வை போக்க பத்து வழிகள்;

வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகள்

1. எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். துன்பம், உடல்நலக்குறைவு, தோல்வி பற்றிய எண்ணங்கள் வரும்போதெல்லாம், உங்கள் எண்ண ஓட்டங்களை மாற்றுங்கள்.

2. எதிர்பாராமல் ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து பின்பற்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள் எதேச்சையாக நிகழ்வதை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனத்திற்குத்தான் இந்த உலகம் அதிர்ஷ்டம் என்று பெயர் கொடுத்திருக்கிறது.

3. நல்லது நடக்கும் என்று திடமாக நம்புங்கள். தீவிரமான நம்பிக்கைகள் பொய்க்க வழியே இல்லை.

4. தவறுகள் ஏற்பட்டால் அவற்றை சரியான கோணத்தில் பார்த்துப் பழகுங்கள். அதிலிருந்து படித்த பாடமென்ன, அந்தத் தவறு மீண்டும் நேராமல் பார்ப்பது எப்படி என்றெல்லாம் ஆராயுங்கள்.

5. செத்த பாம்பை அடிக்காதீர்கள். மீட்கவே முடியாத திட்டம் என்று ஒன்று முடிவாகிவிட்டால், அதில் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள்.

6. மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது. உங்களுக்கு வழங்கப்பட்டிக்கும் வாழ்க்கையை முழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதனை மேம்படுத்தப் பாருங்கள். தன்னிரக்கம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கு எக்காரணம் கொண்டும் இடம் தராதீர்கள்.

7. தோல்வி என்பது, தங்களைத் தயார் செய்து கொள்ளாதவர்களின் விருப்பத் தேர்வு. திட்டமிடாமை, தயக்கம், செயல்படுவதில் சுணக்கம் எல்லாம் கொண்டவர்களுக்கே தோல்வி வருகிறது.

8. மகிழ்ச்சி – சோர்வு, இரண்டுமே எங்கிருந்தோ வந்து உங்களைத் தொற்றிக் கொள்கிற விஷயமல்ல. இரண்டுமே நீங்களாக உங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற விஷயங்கள்தான். எதைப் படிக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தே இவை ஏற்படுகின்றன.

9. நல்ல நண்பர்களின் பழக்கம் நல்ல புத்தகம் படிபடர்க்கு சமம் .

10.ஏதேனும் லட்சியம் ஒன்றின் உங்களுக்குள் ஏற்படுத்தி கொள்ளுங்கள் .

அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல்

அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல் குறித்து இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தந்திகள் வழியே செய்திகள் அனுப்புவது எப்படி என்பது அவர் அடிமனதில் இருந்த கேள்வி. அவர் சிறந்த பியானோ கலைஞர்.

ஒரு பியானோவை இசைத்த போது மற்றோர் அறையில் இருந்த பியானோ அதே இசையை எதிரொலித்தது. கம்பியின் அதிர்வுகளைக் காற்றில் ஏற்றி அனுப்பமுடியும் என்பதை அவர் உணர்ந்தார். தொலைபேசியைக் கண்டுபிடிக்க இது மிகவும் துணை செய்தது. கலைகளில் இருக்கும் ஈடுபாடு, உங்கள் ஆராய்ச்சித் திறமையை அதிகரிக்கும் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமா என்ன?

என்ன பெரிய புடலங்காய்

ஏதாவது சொன்னால், “என்ன பெரிய புடலங்காய்” என்பது வழக்கம். இதற்கொரு காரணமுண்டு. சிலருக்கு, சின்ன வயதில் புடலங்காய் பிடிக்காது. வளர்ந்த பிறகும் அதே வெறுப்பு நீடிக்கும். நெருக்கமான யாராவது “சாப்பிட்டுப் பாருங்களேன்” என்று வற்புறுத்தியதும் சுவைத்துப் பார்த்தால் பிடித்துப் போகும்.

விழுங்கச் சிரமம் என்று நினைத்த புடலங்காய் விருப்பமானதாய் மாறும். இதேபோலத்தான் வாழ்வில் சில விஷயங்களை நம்மால் ஆகாது என்று நினைத்து விட்டிருப்போம். ஆனால் பின்னால் முயன்று பார்த்தால் அவை நமக்கேற்றதாகவும் நல்லவையாகவும் தெரியும். “என்ன பெரிய புடலங்காய்” என்று எதையும் தள்ளாதீர்கள். முயன்று பாருங்கள்

சாதனைக்கு

நல்ல நோக்கம் ஒன்று நிலையான சாதனைக்கு அடித்தளமாய் அமைகிறது. காது கேளாதவர்களுக்குத் துணைசெய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் அதன் நீட்சியாகத் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.

அலெக்ஸாந்தர் கிரஹாம்பெல் ஓர் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தீர்க்கதரிசியும்தான். தொலைபேசி கண்டுபிடித்த பிறகு தன் தந்தைக்கு அவர் எழுதிய கடிதத்தில், “தண்ணீர் இணைப்பு எரிவாயு இணைப்பு போல என் தயாரிப்பு வீட்டுக்கு வீடு இடம்பெறும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு கனவு – ஒரு கண்டுபிடிப்பு இரண்டுக்கும் பயன் கருதாத அணுகுமுறையே பாதையிட்டது

ஆசிரியை,

தன் கணவனை திடீர் மாரடைப்பில் பலிகொடுத்த அந்த ஆசிரியை, வாழ்வின் நுட்பத்தை அந்த இழப்பில் உணர்ந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பில் மாணவர்களிடம் சொன்னார், “வாழ்க்கை என்பதே நேசிப்பதற்கும், உணர்வதற்கும், பகிர்வதற்கும் தரப்பட்டுள்ள வாய்ப்பு. இது எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் சில அழகான அம்சங்களை உணருங்கள்.

காற்றில் தவழும் நறுமணம், கண்களில் தென்படும் பூக்கள், எங்கோ கேட்கும் இசை, கடந்து போகும் குழந்தை, எல்லாவற்றையும் நேசியுங்கள்” என்றார். அதன்பிறகு வாழ்க்கை அனுபவமே புதிதாக இருப்பதை உணர்ந்த அவரின் மாணவர்கள், உயிர்ப்பும், அன்பும் நிறைந்த மனிதர்களாய் மலர்ந்தார்கள். வாழ்வென்னும் பாடத்தைப் புரியவைத்த அந்த ஆசிரியையை நாளெல்லாம் நினைவில் கொண்டார்கள்.

எத்தனையோ?


பொது விடுதி ஒன்றில் புகழ்பெற்றபியானோ கலைஞர் ஒருவர் தொடர்ந்து வாசிப்பது வழக்கம். அவர் இசைப்பதைக் கேட்பதற்காகவே ரசிகர்கள் கூடுவார்கள். விடுதிக்கு தொடர்ந்து வரும் செல்வந்தர் ஒருவர் நிறைய நன்கொடை தருபவர்.

ஒருநாள் அவர் “நீ பியானோ வாசித்தால் மட்டும் போதாது. பாடிக்கொண்டே வாசிக்கவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். தயங்கிய இசைக்கலைஞர், வேறுவழியின்றிப் பாடினார். தானோர் அற்புதமான பாடகர் என்பதே அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. “மோனா மோனாலிசா” என்றஅந்தப் பாடல் உலகப் புகழ் பெற்றது. தனக்குத் திறமை இருந்தும் அதனைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் இன்னும் எத்தனையோ?

ஓர் இளைஞர்.

தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை என்றபுகாருடன் ஒரு துறவியைத் தேடிப்போனார் ஓர் இளைஞர். “சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். வழியில் தென்பட்ட மரமொன்றைஇறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்த மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்றலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். துறவியோ மரத்தை இறுகப் பற்றியிருந்தார். குழப்பமடைந்த இளைஞரிடம் சொன்னார். மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களைக் கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்” என்றார் துறவி.

விடாமுயற்சி

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு

- சாமிநாதன்

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள். தங்கள் தீவிரத்தை அதிகப் படுத்துகிறார்கள். அதன்விளைவாக திறக்காத கதவையும் முட்டி மோதித் திறக்கிறார்கள். ஒரு வேலை வாய்ப்பையோ, வணிக வாய்ப்பையோ அந்த முயற்சியின் மூலம் பெறுபவர்கள், அந்தத் தீவிரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். காலம் முழுவதும் தங்களைக் காக்கப் போவது அந்தத் தீவிரம்தான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

முதல் முயற்சியிலேயே கிடைத்த வேலை, முதல் பார்வையிலேயே கனிந்த காதல் போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. காத்திருப்பின் வலி தெரியாமலேயே கனிந்துவிடுகிற வெற்றிகளின் அருமை சிலருக்கு சில சமயங்களில் தெரியாமல் போவதுண்டு.

விடாமுயற்சியைத் தக்கவைத்துக் கொள்கிற மனிதனை, அவனது நிர்வாகமும், சமூகமும் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அவனை அதிகம் நம்புகிறது. சாத்தியமற்றவற்றைக் கூட சலிக்காது முட்டி மோதுகிற மனிதன் சாதிக்கப் பிறந்தவன் என்பது, எல்லோரும் அறிந்த ரகசியம்.

நீங்கள் வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் சரி, விடாமுயற்சியைக் கைவிடாதவர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதற்கு உண்மையாய் இருங்கள். நீங்கள் நினைத்தால் கூட உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

இதற்கு வெளியிலிருந்து ஊக்கங்களோ வழிகாட்டுதல்களோ தேவையில்லை. ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்று உணரும்போது, நம்மை நிரூபிக்க வேண்டிய காலநெருக்கடி இருப்பது எல்லோருக்குமே புலப்படும்.

சாதாரண மனிதர்களுக்கு பொழுது போகாது, சாதனையாளர்களுக்கோ பொழுது போதாது. இந்த முனைப்பும் காலம் பற்றிய விழிப்புமே காலங்காலமாய் வெற்றியாளர்களை செதுக்கி வருகிறது. தொடர் முயற்சி, வாழ்க்கையில் நமக்கிருக்கும் முக்கியமான துருப்புச்சீட்டு. குறிப்பிட்ட அளவு வயது வந்த பிறகோ அனுபவம் அடைந்த பிறகோ அதனைக் கீழே போட்டு விடலாகாது.

ஏனெனில் காலத்தோடு சேர்ந்து நாமும் பழசாகாமல் காப்பாற்றுவதே அதுதான். எனவே, விடாமுயற்சி செய்யுங்கள்…. விடாமுயற்சியைத் தக்க வைத்துக் கொள்ள!!

காலம் உங்கள் காலடியில்

தொடர் – 8

-சோம.வள்ளியப்பன்

நேர மேலாண்மை ரகசியம்

அது ஒரு மருத்துவரின் கிளினிக். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே போயிருக்கிறேன். அதே தெரு. அதே கட்டிடம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அதிக வேறுபாடு இல்லாததால் சுலபமாக கண்டுபிடித்தேன். ஆனால், வராண்டா தாண்டி உள்ளே போனதும் கண்ணில் பட்ட இடம் மிகவும் புதியதாக இருந்தது. பிரமிப்பு தந்தது.

சுவர்களில் தெரிந்த சுத்தம் மற்றும் பளபளப்பு… அங்கேயும் இங்கேயுமாக சுறுசுறுப்பாக வளைய வந்த நர்சுகள், குளுகுளுவென இருந்த ஏசிக் காற்று, மருத்துவரை பார்க்க வரும் நோயாளிகள் அமர்வதற்கு என்று போடப்பட்டிருந்த அழகிய நாற்காலிகள், மருத்துவரைத் தேடி வந்திருந்த நோயாளிகளின் எண்ணிக்கை போன்றவை மட்டுமல்ல, எனது பிரமிப்பிற்கு காரணம். அவற்றையெல்லாம்விட முக்கியமாக, முன்பு ஒரு அறை மட்டுமே இருந்த இடத்தில், இப்போது மூன்று அறைகள் இருந்தன. ஆமாம், நோயாளிகளைப் பார்க்கும் அறைகள் மட்டுமே, மூன்று இருந்ததுதான் ஆச்சரியப்பட வைத்தது.

டாக்டர் சச்சிதானந்தம் கிளினிக் தானே இது! என்று யோசித்தபடி, அந்த அறைகளின் வெளியே, வேறு எந்த மருத்துவர்களின் பெயர்களை எழுதியிருக்கிறார்களா? என்று பார்த்தேன். ஹுஹும். பெயர் ஏதும் போடவில்லை.

பக்கத்தில் அமர்ந்திருந்த நோயாளி ஒருவரிடம் மெதுவாக விசாரித்தேன். வேறு டாக்டர் எவரும் இல்லை. இங்கே அதே ஒரே மருத்துவர் மட்டும்தான் என்பதை அவர் உறுதி செய்தார்.

அடுத்து, ஒரே மருத்துவர் இவ்வளவு நோயாளிகளைப் பார்க்க முடியுமா? என்கிற கேள்வி மனதில் வந்தது. “என் முறை எப்போது வரும்? நான் எப்படி துரிதமாக மருத்துவரைப் பார்த்துவிட்டு கிளம்புவது?” என்கிற ஆதங்கங்களைவிட, “இங்கே இவ்வளவு மாறுதல்கள் வந்திருக்கின்றனவே! ஏன்? இவற்றால் என்ன பலன்?” என்று தெரிந்து கொள்ளுகிற ஆர்வமே அதிகமானது.

அப்போது மருத்துவர் சச்சிதானந்தம் முதல் அறையில் இருந்து வேகமாக வெளியேறி, அடுத்த அறைக்குள் போவதைப் பார்த்தேன். மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கலாம். மருத்துவர் அந்த அறையில் இருந்தும் வெளிப்பட்டு, மூன்றாவது அறைக்குள் வேகமாகப் போனார்.

அதே சமயம் எங்கள் வரிசையும் நகர்ந்தது. ஒவ்வொரு அறையில் இருந்து மருத்துவர் இன்னொரு அறைக்குப் போன போதெல்லாம் எங்கள் வரிசையும் நகர்ந்ததற்கு காரணம், மூன்று அறைகளிலும் அவரைப் பார்க்க வந்த நோயாளிகள் இருந்ததும், மருத்துவர் ஒவ்வொரு அறையாகப் போய் அவர்களைப் பார்ப்பதும்தான் என்று புரிந்தது.

மருத்துவர் சச்சிதானந்தத்தின் நேர மேலாண்மை ரகசியம் என்று பார்ப்பதற்கு முன்னால், அதன் பலன்களைப் பார்த்துவிடலாம்.

அவருடைய கிளினிக்கில் அவர் கொண்டு வந்திருக்கிற மாறுதல்களால், அவருடைய தனிப்பட்ட உற்பத்தி திறன் (பர்சனல் புரொடெக்டிவிட்டி), முன்பிருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு ஆகிவிட்டது. அதாவது அவர் முன்பு பார்த்து வந்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமான நோயாளிகளைப் பார்க்க, அவர்களுக்கு உதவ முடிகிறது.

அவர் அதற்காக இரண்டு மடங்கு கூடுதல் நேரம் வேலை செய்யவில்லை. அது சாத்தியமாகவும் இருக்காது. ஒரே அளவு நேரம். ஆனால் கூடுதல் பலன்!

அப்படி என்னதான் அவர் செய்கிறார்? அவர், அவர் வேலையை மட்டும் செய்கிறார். அதுதான் அவர் கொண்டுவந்த வேறுபாடு.

இதில் என்ன புதுமை! மருத்துவர் வேலைதானே செய்வார்! என்று தோன்றுகிறதா? விஷயம் இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததும் இப்போது செய்வதற்கும் என்ன வேறுபாடு? அப்போது, புறநோயாளிகளை பார்க்கும் கிளினிக் ஒன்றை ஏற்படுத்திவிட்டு, அவர் தனியாளாக நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்காக அவர் செய்தவை என்ன என்ன?

காலையில் வந்து பூட்டியிருக்கும் கதவினைத் திறப்பது. இடத்தினை (லேசாகவேனும்) தூசுதட்டி சுத்தம் செய்வது. வரும் நோயாளிகளிடம் என்ன பிரச்சனை என்று விசாரிப்பது. அவர்களுடைய எடை, ரத்த கொதிப்பு, டெம்பரேச்சர் முதலியவற்றை சோதிப்பது. அவர்களுக்கு மருந்து எழுதிக்கொடுப்பது. தேவைப்படுபவர்களுக்கு ஊசி போடுவது. சிலருடைய காயங்களுக்கு மருந்து போடுவது. அவர்களிடம் பணம் வாங்குவது. கேட்பவர்களுக்கு ரசீது எழுதிக்கொடுப்பது. இடையில் வரும் தொலைபேசி விசாரிப்புகளுக்கு பதில் சொல்லுவது..

இவையெல்லாம் அவசியமானவைதான். இவற்றைச் செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் கேள்வி இதுதான், இவற்றை மருத்துவம் படிதத மருத்துவர் தான் செய்ய வேண்டுமா?

“வேலையில் சிறியது என்று பெரியது என்று வேறுபாடுகள் கிடையாது , பார்க்கக்கூடாது” என்றெல்லாம் இங்கே நினைத்து குழப்பிக்கொள்ள தேவையில்லை. இங்கே பார்க்க வேண்டியது, இருக்கிற நேரத்தினை எப்படி செவ்வனே பயன்படுத்துவது? அவ்வளவுதான்.

அந்த கோணத்தில் இருந்து பார்த்தால், மருத்துவர் அவரது நேரத்தினை தகுந்த வேலைகளில் போக்காமல், மற்றதிலும் சிலவிடுவதால், அவர் பார்க்கக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து போகிறது.

கத்தியின் கைப்பிடி மரத்தினால் செய்ததாக இருந்தால் போதும். அற்புதமான இரும்பினைப் பயன்படுத்தி, கத்தியின் “பிளேடு” செய்யலாம். அதில் எதற்காக கைப்பிடி செய்ய வேண்டும்? அதற்கு மரம் போதுமே!

சூட்சமம் இதுதான். நாம் நம்முடைய நேரத்தில் எவ்வளவினை, நம்முடைய மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் சிலவிடுகிறோம்?

மருத்துவர் சச்சிதானந்தம் இப்போது இவற்றை எல்லாம் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் தகுந்த ஆட்களை அமர்த்தி விட்டார். அவர்கள் மேலே சொல்லப்பட்ட “முன் பின்” வேலைகளையும் பார்த்துவிடுகிறார்கள். இதுதான் அவரது நேர மேலாண்மை ரகசியம்.

மூன்று அறைகளுமே புறநோயாளிகளை (Out Patient) அவர் பார்ப்பதற்கான அறைகள் தான். அங்கே அமரவைக்கப்படும் நோயாளிகளிடம் செய்ய வேண்டிய “முன் வேலைகளை” (Pre) எல்லாம் உதவியாளர்கள் செய்துவிடுவார்கள்.

மருத்துவர், வருவார். தேவைப்படும் மேல் விபரங்கள் மட்டும் சேகரித்துக்கொண்டு, ஆலோசனை சொல்லிவிட்டு, அடுத்த அறையில் ஆயத்தமாக இருக்கும் மற்றொரு நோயாளியைப் பார்க்கப் போய்க்கொண்டே இருப்பார். மருத்துவர் நகர்ந்ததும், அந்த நோயாளிக்கு தொடர்ந்து செய்ய வேண்டிய, பின் வேலைகளை (Post), தக்கவாறு அவரது உதவியாளர்கள் செய்துவிடுவார்கள்.

மருத்துவரின் வேலையை சுற்றி முன்னும் பின்னும் (Pre and Post) சில வேலைகள் இருக்கின்றன. அவையும் முக்கியமானவைதான். ஆனால் அவற்றை மருத்துவர்தான் செய்ய முடியும் என்பதில்லை. மருத்துவம் படிக்காதவர்களே செய்யமுடியும். பிறகு அதை எதற்கு மருத்துவம் படித்தவர் செய்துகொண்டிருக்க வேண்டும்? அதுவும் அவருக்காக எத்தனையோ நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கும் போது!

அவருடைய அணுகுமுறையில் சில மாற்றங்கள் செய்தார். அதற்கு ஒப்ப, அவரது வேலையிடத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்தார். சில வேலைகளை அவர் பகிர்ந்தளித்தார் (டெலிகேஷன்). பலன்? அவரால் இரண்டு மடங்கு அதிகமான நபர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடிகிறது. பலருக்கு வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. அவருக்கும் கூடுதல் வருமானம் வருகிறது.

இந்த அணுகுமுறை மருத்துவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ன? எல்லோருக்குமே பொருந்தும். ஆக, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்.

நம்முடைய மிகச் சிறந்த திறன் என்ன? நம்முடைய நேரத்தில், எவ்வளவு அதில் போகிறது?

நம்முடைய நிறுவனத்திலோ, அலுவலகத்திலோ, வீட்டிலோ நாம் செய்துகொண்டிருக்கும் வேலைகள் எல்லாம்., நாமே செய்ய வேண்டியவைதானா? நம்மைவிட திறன், படிப்பு, ஊதியம் போன்றவற்றில் ஏதேனும் குறைவாக உள்ளவர்களால் செய்யக்கூடிய எத்தனை வேலைகளை (Tasks) நாமே செய்து கொண்டிருக்கிறோம்?

அப்படிப்பட்ட வேலைகளை அவர்களை செய்ய அனுமதிப்பதன் மூலம், அவர்களிடம் பகிர்ந்து அளிப்பதன் மூலம், நம்முடைய நேரம் நம்முடைய மிகச் சிறந்த திறனுக்காக (பெஸ்ட் டேலண்ட்) விடுவிக்கப்படுகிறது.

ஓட்டுனர், சமையல்காரர், வீட்டு வேலைகளுக்கு ஆள், அலுவலக வேலைகளுக்கு ஆள் போன்றவர்கள் நம்முடைய நேரத்தினை நமக்கே மீட்டுத் தருபவர்கள்.

மிக எளிமையான உதாரணம் சொல்லுவதென்றால், கவிஞர் கண்ணதாசன் செய்ததை பற்றி சொல்லலாம். அவர், பாடல்கள் எழுதியதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவர் எழுதவில்லை. “டிக்டேட்” செய்தார்! பாடல்களை அவர் சொல்லுவாராம். வேறு எவரோ எழுதிக்கொள்வார்களாம். பேப்பர் தேடுவது, பேனாவிற்கு மை போடுவது, எழுதியதை படி (பிரதி) எடுப்பது போன்ற வேலைகளை அவர் செய்தது இல்லை.

யந்திரங்கள், அலுவலகத்தில் உள்ள இடங்கள் (ஸ்பேஸ்) போன்றவை மட்டுமல்ல, திறமையான ஊழியர்கள் கூட சரியாக பயன்படுத்த வேண்டிய வளம்தான்.

மனித வளத்தினையும் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்றால், அவற்றின் Best Fit-ல் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.